மானுட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று, பயணம். ஏதோ ஒன்றை நோக்கி, ஏதோ ஒன்றைத் தேடி நாம் பயணித்து கொண்டேயிருக்கின்றோம். அவ்வாறான பயணத்தில் நாம் சந்திக்கும், நாம் பழகும் மனிதர்கள் நம்முள் ஓர் அதிர்வை ஏற்படுத்துகின்றனர் என்றால் அது மிகையில்லை.
“I had lost my wallet. Dont give me more money. Just the ticket fare to my place.97 Rupees” என்று கல்லூரி முதல் ஆண்டில், பேருந்து நிலையத்தில் என்னிடம் கேட்டவரிடம் கொடுத்தேன், 150 ரூபாய். “Use the 100 for the ticket, and eat something with the 50 rupees”. அவன் குடிக்க மட்டுமன்றி,சைடு டிஷ்க்கும் சேர்த்து கொடுத்தேன் என்று என் அண்ணன்களிடம் சொன்னபோது தான் புரிந்தது.
திருப்பதி செல்ல பேருந்தின் முன் சீட்டில் அப்பாவோடு அமர்ந்து ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருந்த போது தான், அந்த குடும்பமும் பேருந்தில் ஏறியது. பயணத்தில் ஒருவரையொருவர் அறிந்து கொண்டு, நட்போது பழகி வீடு திரும்புகையில், அந்த பெண்மணி சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது, “பேருந்து ஏறியவுடன் உங்க பையனோட சிரித்த முகம். நல்ல சகுனம்.” அன்றிலிருந்து புன்ன்கையோது தான் பயணிக்கின்றேன், ஆனால் முன் சீட்டில் அல்ல.
மழையோடு பயணிப்பது எப்போதும் ஓர் சுகானுபவம். அவ்வாறான ஓர் நேரத்தில் புயலினால் மரங்கள் விழுந்து, நெய்வேலியில் இருந்து 30 km முன்பே பேருந்து நின்று விட்டது. பேருந்து இனி செல்லாது என்றான் தலைவாசல் விஜய் போல் இருந்த அந்த நடத்துனர். இளையராஜா கேட்டதில் மொபைலில் சார்ஜும் இல்லை. “கவலைப்பட வேண்டாம்” என ஒரு sms வீட்டுக்கு அனுப்பி விட்டு, நானும் இன்னும் நான்கு பேரும் நடக்க தொடங்கினோம். “ஏனப்பா.. புயல் வருதுனு டிவி ல சொன்னாங்களே..ஏன் பஸ்ல வரீங்க?” என கேட்ட மனிதர்களை தாண்டி “சாப்பிட, குடிக்க எதாவது வேண்டுமா?” என கேட்ட மனிதர்கள் தான் அதிகம்.
“வாழ்வின் பல முக்கிய முடிவுகள் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் எடுக்கபடுகின்றன” என்று எப்போதோ எங்கேயோ படித்த ட்விட்டர். நம்மை கடந்து செல்லும் மரங்களும், முகத்தில் வீசும் காற்றும் வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வையும் மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்றால் அது உண்மைதான்.
அப்பாவுக்கு accident ஏற்பட்டு, அவருடன், ஆம்புலன்சில் பயணித்த போது தான், அவர் இல்லாத வாழ்வு கண் முன் தோன்றி பயமுறுத்தியது. அன்று, விபத்துக்கு முன் “அப்பா.. வேலைக்கு போகாதீங்க. வீட்ல இருங்க” என்பதையும் மீறி அவர் வேலைக்கு சென்றார். ஆம்புலன்சில் அப்பா என் கை பிடித்து, “sorry da” என சொன்ன போது நெஞ்சு இன்னும் வலித்தது.
சென்னையின் நீண்ட சாலைகளில், அடர்ந்த traffic நிரம்பிய சாலைகளில் வழி விட்ட மனிதர்களும், பாதை ஏற்படுத்தி கொடுத்த அத்தனை டிராபிக் போலிசும் அன்று எனக்கு தெய்வங்களாக தெரிந்தனர்.
பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த புதிதில், அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என கேள்வி பட்டு கண்ணீர் சிந்திய போது, அருகில் இருந்த பெண்மணி கன்னடத்தில், “Alabeda Maga” சொன்ன போது அழுத்தமாக புரிந்தது அந்த உண்மை: “மனிதனோடு மனிதமும் எப்போதும் பயணித்து கொண்டே இருக்கிறது”